விளாத்திகுளம், அக்டோபர் 23 –
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், சூரங்குடியில் பனைப் பொருட்கள் குறுங்குழும கட்டிட பொது வசதி மையம் அமைப்பதற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் ரூ5.29 கோடியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் செந்தில் வேல்முருகன், தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஸ்வர்ணலதா, திமுக ஒன்றிய செயலாளர்கள் சின்னமாரிமுத்து, இம்மானுவேல், அன்பு ராஜன், செல்வராஜ், விளாத்திகுளம் திமுக நகர செயலாளர் வேலுச்சாமி, குழும உறுப்பினர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



