திமுக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம்
சங்கரன்கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சங்கரன்கோவில் தொகுதி ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன், பெரியதுரை, வெள்ளத்துரை, ராமச்சந்திரன் ,குணசேகரன், சேர்மத்துரை, நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இதில் ராஜா எம்எல்ஏ பேசியதாவது,
ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனு மீது அதனை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் தேவைகளை தீர்த்து வைக்க வேண்டும் எனவும், அரசின் திட்டங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் வெள்ளத்துரைபாண்டியன், அந்தோணிராஜ், ஜெய்சங்கர், முத்துப்பாண்டியன், கருப்பசாமி, விராச்சாமி , அய்யலுசாமி சுமதி கனகவேல், விசுவாசம், முத்துலட்சுமி, மாரியம்மாள், செல்வி ,சுமதி, சரஸ்வதி ,கனகலட்சுமி, சரஸ்வதி, சுரேஷ், ஜெயலட்சுமி ,சுப்புலட்சுமி முனீஸ்வரி, ஜெயக்குமார் ,காளியம்மாள், பரமசிவன்பொன்னம்மாள், மகேஷ், முருகன், வெள்ளைப்பாண்டி, கவிதா, முருகையா பிச்சைப் பாண்டி ,குணசேகரன், சுப்பிரமணியன், சின்னத்தாய் ,அமுதா, கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.