ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி , திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்நத்தத்தில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் மு.பாஸ்கரன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மு.மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ம.ஹேமலதா மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.தட்சணாமூர்த்தி, பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன் உட்பட பலர் உள்ளனர்.



