தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரண்மனை, வழிவிடு முருகன் கோயில், நாகநாதபுரம், ஒத்தக் கடை பகுதிகளில் விஜயகாந்த் உருவப் படத்திற்கு நகர் செயலர் பாண்டியன் தலைமையில் தேமுதிகவினர் இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். துணை செயலர் சதாம் உசேன், பொதுக்குழு உறுப்பினர் குமார், இளைஞரணி செந்தில் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.



