மதுரை ஜூலை 20,
மதுரை மாவட்டம் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்
மதுரை மாவட்டம் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் காதக்கிணறு கிராமத்தில் உள்ள ஆர்யன் மகாலில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக அரசு சேவை என்ற நோக்கில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை கடந்த 18.12.2023 தொடங்கி வைத்துள்ளார்கள். இதனையடுத்து மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 18.12.2023 முதல் 06.01.2024 வரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகள், 3 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி எல்லைப் பகுதியையொட்டியுள்ள 24 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், 97 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பெறப்பட்ட 38,441 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது இதன் தொடர்ச்சியாக, ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்படுகிறது. தற்போது 395 கிராம ஊராட்சிகளில் 73 முகாம்கள் 11.07.2024 தொடங்கி 14.09.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம்களில் 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி. இன்றைய தினம் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் காதக்கிணறு கிராமத்திலும், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஆண்டிப்பட்டி கிராமத்திலும், மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிடாரிப்பட்டி கிராமத்திலும் ‘மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெற்றன. காதக்கிணறு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மேலும், இந்த சிறப்பு முகாம்கள் வருகின்ற 14.09.2024 வரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடைபெற உள்ளன. இதனைப் பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கேட்டுக்கொண்டார். இந்த முகாமின் போது, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.வெங்கடேசன்.
மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மணிமேகலை, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அரவிந்தன், காதக்கிணறு ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.