ராமநாதபுரம், ஜுன் 1-
ஜுன் 2 ம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள பள்ளிகளான
வள்ளல் பாரி நடுநிலைப்பள்ளி,
நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
அறிஞர் அண்ணா நடுநிலைப்பள்ளி,
எம் எஸ் கே தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நகராட்சி சேர்மன் ஆர் கே கார்மேகம் நேற்று ஒவ்வொரு பள்ளியிலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பள்ளியில் மாணவச் செல்வங்களுக்கு இடையூறு இல்லாத வகையில் வகுப்பறையின் தூய்மையினையும்,
கட்டடத்தின் நிலைமை பாதுகாப்பாக உள்ளதா, தண்ணீர், மின் வசதி, கழிப்பறைகள் வசதி சரியாக உள்ளதா என்று என்பதனை ஆய்வு செய்து பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்.



