இராமநாதபுரம், பிப். 24 –
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனம் மாணவர்களை ஏற்றி மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை சத்திரக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது பள்ளி வளாகத்தின் அருகில் திரும்பி கொண்டிருந்தபோது பள்ளி வாகனத்துக்கு பின்னால் வந்து கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற பள்ளி வாகனத்தில் திடீரென மோதியது. இதில் பள்ளி வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்தது.
வாகனத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். பள்ளி குழந்தைகளை அங்கிருந்த பொது மக்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து ஏற்படுத்திய லாரியை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்து வந்த சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மருத்துவமனைக்கு விரைந்து சென்று காயமுற்ற பள்ளி குழந்தைகளை சந்தித்து அவர்களின் பெற்றோரிடம் ஆறுதல் கூறினார்.



