அரியலூர், ஜூலை:22
அரியலூர்,பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை ஒன்றியத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்கத்தின் 45 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஆலோசனையின் படி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வழிகாட்டுதலின்படி செந்துறை ஒன்றிய பாமக கட்சியின் மூத்த முன்னோடிகள் கட்சியின் இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வன்னியர் சங்கத்தின் 45 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு செந்துறை அண்ணா நகர், வன்னியர் சங்க கட்டிடத்தின் அலுவலகத்தில் முன்பு பெரம்பலூர் பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் தொண்டர்களின் அழைப்பை ஏற்று சிறப்பு அழைப்பாளர் வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி வருகை புரிந்து வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்தும் சங்கத்தின் மூத்த முன்னோடி பொன். ராஜமாணிக்கனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட தலைவர் பாமக மதுரா செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் அம்சவள்ளி, வன்னியர் சங்க செயலாளர் சுப்பிரமணியன், மாவட்டத் தலைவர் வரதராஜன், செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் செல்ல.ரவி, பி.ஆர்.ராஜா, திருமுருகன், காமராஜ் மற்றும் நிர்வாகிகள் , வழக்கறிஞர் செல்வமணி, ஒன்றிய கவுன்சிலர் செல்வகடுங்கோ , மருதவேல், மொழியரசன்,ஜெ. காமராஜ், நமசு , குருசாமி , சேட்டு, இளங்கோவன், கொளஞ்சியப்பன், தனவேல், அருள்,செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமான பாமக தொண்டர்கள் வன்னியர் சங்கத்தின் மூத்த முன்னோடிகள் என பலரும் கலந்து கொண்டு 45 ஆம் ஆண்டு சங்கத்தின் விழாவினை கொண்டாடினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.