தருமபுரி மாவட்டத்திற்கு காவேரி உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து திமுக சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தர்மபுரி நகரத்தின் சார்பில் நான்கு ரோடு, தர்மபுரி பஸ் நிலையம், ராஜகோபால் பூங்கா ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தர்மபுரி நகர செயலாளர் நாட்டான் மாது, முல்லைவேந்தன், சுருளி, தங்கமணி, வெல்டிங் ராஜா, குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .இதனை தொடர்ந்து பிடமனேரி , இலக்கியம்பட்டியில் மாவட்ட பிரதிநிதி காவேரி தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய குழு கவுன்சிலர்சாந்தி காவேரி ஒன்றிய அவைத்தலைவர் மாங்கனி செல்வராஜ், கௌதம், தண்டபாணி, உதயசூரியன் ,அசோக் குமார், விஜயன் பாளையம் அன்பு, அண்ணாதுரை, கிளைச் செயலாளர் சம்பத், சீனிவாசன், மாது, ஜெயராமன்,பிரபு, செல்வராஜ், உஸ்மான் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்



