புதுக்கடை, டிச. 27-
புதுக்கடை அருகே இனையம்புத்தன்துறை மீனவர் கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் எதிர்புறம் உள்ள மைதானத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் புதிதாக கலையரங்கம் அமைக்க ரூ. 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய கலையரங்கம் அமைக்கப்பட்டது.
கலையரங்கத்தை இன்று தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் எம் எல் ஏ திறந்து வைத்தார். இனயம் புத்தன்துறை அருட்பணியாளர் ராஜ் ஜெபம் செய்து அர்ச்சித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் மற்றும் பங்குபேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், அருட்சகோதரிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



