சமூக நீதிப் பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் கே பாலு பங்கேற்பு! !
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தலைவர்,செயலாளர், மகளிர் தலைவி, செயலாளர் தேர்வு செய்ய நியமனம் மனு பெறுவதற்கான கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு பாமக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கொ,ப ராஜசேகரன் தலைமை தாங்கினார்,
முன்னதாக நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் அண்ணாமலை வரவேற்புரையாற்றினார், பாமக ஒன்றிய செயலாளர்கள் வெள்ளியரசு, அருண், சித்தார்த், ரங்கசாமி,மணிகண்டன், குமார் ,சந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர், இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக
பாமக சமூக நீதிப் பேரவை மாநில தலைவர் வழக்கறிஞர் கே பாலு, மாநில சிறுபான்மை பிரிவு ஷேக் முகைதீன், சமூக முன்னேற்ற சங்கம் பொன்மலை
ஆகியோர் கலந்து கொண்டு பொறுப்பாளர்கள் பணிகள் ,சட்டமன்றத் தொகுதியில் ஒரு அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவரமாக எடுத்துரைத்தனர், இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேகநாதன், மாவட்ட நிர்வாக குழு தலைவர் நகுலன், சிவானந்தம், மாநில
பொதுக்குழு உறுப்பினர் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவானந்தம், கஜேந்திரன்,பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல், இளைஞர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் குபேந்திரன், மாநில பேச்சாளர் வெங்கடேசன், ஒன்றிய தலைவர் தமிழ், ஒன்றிய கவுன்சிலர் பூபதி தேன்மொழி சென்ன கிருஷ்ணன்,மாவட்டத் துணைச் செயலாளர் கண்ணன்,
ஊராட்சி மன்ற தலைவர்கள் அருள், வெங்கடேசன்,தமிழ் செல்வி செல்வகுமார், பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளார் கிருபாகரன்
ஆகியோர் கலந்து கொண்டனர்,
நிறைவாக ஊத்தங்கரை நகர செயலாளர் பாஸ்கரன்
நன்றி உரை கூறினார்,
இதில் பாமக கட்சி சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்,



