வேலூர்_09
வேலூர் மாவட்டம்: வேலூர் அரசமர பேட்டையில் உள்ள ஸ்ரீ சாலை மாரியம்மனுக்கு கோயிலில் ஆடிப்பூர விழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், மலர், வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. பல்வேறு வகையான சித்ரான்னங்கள் (சாதம்) படையல் இடப்பட்டன. மகா தீபாராதனையுடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு, வளைகாப்பு நடத்தப்பட்டது. அன்னதானத்துடன் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு மற்றும் கண்ணாடி வளையல்கள் வினியோகம் நடந்தது. விழா குழு தலைமை க.கருணாகரன் வளைகாப்பை துவக்கி வைத்தார் மற்றும் அரசபேட்டை பகுதி வாசிகள் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



