தஞ்சாவூர். டிச.7.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுண்ணுயிரியல் துறை சார்பில் தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் திறந்து வைத்தார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தமிழக அரசு சார்பில் 3 நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இரத்தத்தி ல் உள்ள கிருமிகளை கண்டறிய உதவும் தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவி ரூபாய்11 லட்சத்து,96 ஆயிரத்து930 மதிப்பிலும், கிருமிகளை வகைப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு திறனை கண்டறிய உதவும் வைடெக் கருவி ரூபாய் 16 லட்சத்து 12 ஆயிரத்து 700 மதிப்பிலும், நுண்ணுயிரியல் துறை ஆய்வகத்தில் நிறுவப்பட்டு ள்ளது .மொத்தத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது
இந்த பரிசோதனை கருவி திறப்பு விழா தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு நவீன கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள பரிசோதனை முறைகள் மூலம் இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக் களை கண்டறிய 4நாட்களும், பூஞ்சைகளை கண்டறிய 10 நாட்க ளும் காத்திருக்க வேண்டும். இந்த நவீனம் தானியங்கி கருவியின் பயன்பாட்டால் ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை 24 மணி நேரத்துக்குள்ளும், பூஞ்சைகளை48 மணி நேரத்திற்குள்ளும் கண்டறி யலாம் .மேலும் இந்த கருவிகளின் மூலம் ஒரே நேரத்தில் 30 முதல் 60 இரத்த மாதிரிகளை பரிசோதிக்க முடியும். வெளி ஆய்வகங்களில் ரூபாய் 700 மதிப்பில் செய்யப்பட்டு வரும் இந்த பரிசோதனைகள் இங்கு இலவசமாக செய்யப் படுகிறது.
இந்த நவீன தானியங்கி பரிசோதனை கருவிகள் மூலம் துரிதமாக பரிசோதனை முடிவுகள் பெறப்படுவதால், நோயாளிகளு க்கு சரியான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு விரைவில் குணமடைவர். மேலும் நோயினால் ஏற்படும் இறப்பு விகிதம் பெருமளவு குறையும்.
இந்த விழாவில் நிலையை மருத்துவ அதிகாரி டாக்டர் செல்வம் நுண்ணுயிரியல் துறை தலைவர் யூனிஸ் ஸ்வர்ணா ஜேக்கப் மற்றும் பேராசிரியர்கள், செவிலியர்கள் ஆய்வக நுட்புனர்கள் கலந்து கொண்டனர்