சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் நகராட்சி பேருந்து நிலையத்தில் விரிவாக்க பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சோ.பால்துரை நகர் மன்றத் தலைவர் சுந்தரலிங்கம் நகராட்சி ஆணையாளர் செல்வி பார்கவி மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.



