கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் பழமை வாய்ந்த புளியமரம் சாய்ந்து நடுரோட்டில் விழுந்ததால் சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு. மரம் சாயும் நேரத்தில் அங்கே வந்த தனியார் பள்ளி வாகனம் டிரைவரின் சமயோசித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



