சென்னை, செப்டம்பர் 29 –
சென்னை மதுரவாயலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-143,144 மதுரவாயல், சன்னதி முதல் குறுக்குத் தெருவில் ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உடன் உள்ளாட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், டி.ஆர். பாலு எம்பி, காரம்பாக்கம் க. கணபதி எம்எல்ஏ, சென்னை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் நிலைக் குழுத் தலைவர் பணிகள் சிற்றரசு, சென்னை ஆணையர் குமாரகுருபரன், உள்ளாட்சி முதன்மை செயலாளர் கார்த்திகேயன், 11 மண்டல குழு தலைவர் நெளம்பூர் ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் அருணாச்சலம், ஒன்றிய செயலாளர் தலைவர் துரை வீரமணி, பகுதி துணைச் செயலாளர் வே. மதியழகன், மாமன்ற உறுப்பினர்கள் சங்கர் கணேஷ், ராமாபுரம் செல்வகுமார், ராஜி ஏ. ஸ்டாலின், பாரதி, செல்வி ரமேஷ், வினோத், ரமணி மாதவன், சாந்தி ராமலிங்கம், திலகர், மாலினி மற்றும் வட்ட கழக செயலாளர்கள் த. ரமேஷ், மாதவன், ஆலன், ரூபன், ராதா செல்வம், மோசஸ் உட்பட அமைப்பாளர்கள் தினகரன் சண்முகம், ராஜேஷ், ரவி, மெட்ரோ நகர் சீனிவாசன், மூன் லைட் ரவி, தளபதி மகேஷ், பூத்தமேடு ரகு, போரூர் ராமலிங்கம், பாஸ்கர், பாபு, முருகன், பழனி, செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் 144 வது மாமன்ற உறுப்பினர் ஏ. ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.



