வேலூர்-02
காட்பாடி சிங்கத்தமிழன் சிலம்ப பயிற்சி வகுப்பில் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் தி. அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக, குடியாத்தம் ஜிடிஎம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய. டாக்டர். எல். பிரதாபன் கலந்து கொண்டு,
பொதுத்தேர்வின் காரணமாக சிலம்ப பயிற்சி வகுப்புகளை புறக்கணிக்காமல் தொடர்ந்து பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொண்டும், 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியும் பெற்ற மாணவர்களை பாராட்டி நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.
இதை த்தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல், உடலையும் உள்ளத்தையும் பலப்படுத்தும் சிலம்பக் கலை போன்ற கலைகளை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்பதால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பெருகும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழ்சியில் பயிற்சியாளர்கள் கே. திவாகர், ஜி.புவனேஷ், டி.விக்னேஷ்வரன், எஸ்.சஞ்சய் , ஆர். லோகநாதன், சிங்கத்தமிழன் சிலம்ப பயிற்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.