சங்கரன்கோவில். அக்.7.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வாய்ஸ் ஆப் தென்காசி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ராஜபாளையம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.
சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணி கூட்டம் நடைபெறும் இடத்திற்கு இடத்தை வந்தடைந்தது அதனைத் தொடர்ந்து பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து நடைபெற்ற போதை ஒழிப்பு கூட்டத்தில் தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக வாய்ஸ் ஆப் தென்காசி நிறுவனர் ஆனந்தன் வரவேற்றார் அதனை தொடர்ந்து மனிதநேயம் அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி, சோகோ நிறுவன தலைமை செயல் அதிகாரி பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் போதை ஒழிப்பு குறித்து பேசினர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவி பேசுகையில் ,
தற்போது இந்தியாவில் நவராத்திரி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகின்றது .இந்த திருவிழாவின்பொழுது சென்னை ராஜ் பவனில் தினமும் மாலை பூஜைகள் நடைபெறுவது வழக்கம் அதனால் நான் எங்கும் செல்ல மாட்டேன். அப்படி வெளியே சென்றாலும் பூஜை நேரத்தில் ராஜ்பவன் வந்து விடுவேன். ஆனால் இந்த சங்கரன்கோவிலில் இதுபோன்று ஒரு போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப் போவதாக ஆனந்தன் என்னிடம் கூறினார். அது என் மனதில் மிகுந்த ஆழமாக இந்த போதை பழக்கத்தினால் பல்வேறு குடும்பங்கள் மற்றும் இந்த சமுதாயம் சிதைந்து வருவது மிகவும் வருத்தத்தை தந்தது.தற்போது நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவிற்கும் இந்த நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் உண்டு நவராத்திரி விழா என்பது வெற்றியை குறிப்பதாகும் அதே போல போதை இல்லா நிலையை உருவாக்கி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நான் தற்போது கலந்து கொண்டுள்ளேன். இந்தியாவில் சில மாநிலங்கள் போதை பழக்கத்தினால் முன்னேற முடியாமல் திணறி வருகின்றன. தமிழகத்தில் மத்திய துறையினர் பலகிலோ போதை பொருட்களை கைப்பற்றுகின்றனர். மாநில போலீசார் கஞ்சா தவிர பிற போதைப் பொருளை ஒரு கிராம் கூட கைப்பற்றியதாக தகவல் இல்லை போதைப் பொருள் கிடங்குகள் பாகிஸ்தான், துபாய், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுகின்றன. 40 ஆண்டுகளுக்கு முன்னால் பஞ்சாப் மாநிலம் அனைத்து வளர்ச்சியும் பெற்று முன்னிலை மாநிலமாக திகழ்ந்தது அங்கு போதை பொருட்களால் தற்பொழுது பஞ்சாப் மாநிலம் முன்னேற முடியாமல் திணறி வருகின்றது. இதே போல பல மாநிலங்கள் போதை பொருள்களால் பழக்கங்களால் சிதைந்து வருகின்றது. போதை பொருட்கள் என்பது மது மற்றும் சிகரெட் போன்ற பொருள்கள் மட்டுமல்ல ரசனை ரசாயனங்கள் கலந்த ஹெராயின் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் தற்போது பழக்கத்தில் உள்ளன. இந்த பழக்கங்களால் பல போதைக்கு அடிமையாகி விடுகின்றனர் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருவது வருத்தம் அளிக்கிறது. விளையாட்டாக ஆரம்பிக்கும் இந்த பழக்கங்களினால் நாளடைவில் அதிலிருந்து மீள முடியாமல் உயிரிழப்பு போன்ற சூழ்நிலைகள் ஏற்படுகின்றது. தற்போது தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தற்போது அதிகமாக உள்ளன. போதைப் பொருட்களை விற்பனை செய்து .மாணவர்கள் இடையே பெருகிவரும் போதைப் பழக்கத்தை பெற்றோர்கள் ஆசிரியர்கள் அதை கண்டுபிடித்து சரி செய்து அவர்களை நல்வழி படுத்த வேண்டும். மாணவர்கள் இரவு நேரங்களில் இரண்டு மணி நேரம் குடும்பத்திற்காக செலவழிக்க வேண்டும். குடும்பத்தினருடன் அவர்கள் இருக்கும் பட்சத்தில் கெட்ட பழக்கங்களுக்குள் அவர்கள் செல்ல வாய்ப்பு இல்லை என பேசினார். இந்த கூட்டத்தில் ராஜபாளையம் கிங்ஸ் ரோட்டரி சங்க தலைவர் ராஜவேல், செயலாளர் சங்கிலி விக்ரம் குமார், துணை ஆளுநர் சிவக்குமார் ராஜா, வியாசா கல்லூரி சேர்மன் வெள்ளத்துரை பாண்டியன், வீராசாமி செட்டியார் கல்லூரி சேர்மன் முருகையா, ஜேபி காலேஜ் முதல்வர் ராஜ்குமார், பி எஸ் ஆர் கல்லூரி சோலைச்சாமி கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் கே ஸ்ரீதரன், ஸ்ரீ நல்லமணி யாதவா கல்லூரி மணிமாறன் ரங்கநாயகி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் பிருந்தா ராஜன் மற்றும் பல்வேறு கல்லூரி பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.