மதுரை மே 14
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகன் தரிசனம் காண வருகை புரிந்த
ஜனசேனா கட்சியின் எம்எல்ஏ எலமஞ்சலி சுந்தரபு விஜயகுமார் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு தரிசனம் செய்வற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எலமஞ்சலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரபு விஜயகுமார். எம்எல்ஏ பேசுகையில் இந்திய நாட்டிற்காக போராடும் ராணுவ வீரர்களுக்கும் நாட்டின் தலைமைக்கும் துணையாக தெய்வீக பலம் கிடைக்க வேண்டி தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை முருகன் வீடுகளில் வழிபாடு நடத்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உத்தரவின் பெயரில் இங்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்துள்ளோம் என்று கூறிய அவர்,
இது போர் இல்லை, அது ஒரு தீவிரவாதச் செயல். தீவிரவாத செயல் என்பது பாதுகாப்பு அச்சுறுத்தல் செயலாகும். தீவிரவாத முகத்துடன் யார் வந்தாலும் அவர்களை எதிர்கொள்ள இந்தியாவிற்கு தெரியும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சடங்குகள் நடத்தப்பட்டன, இது நமது ஆயுதப் படைகளுக்கு ஆன்மீக ரீதியில் ஆதரவளிக்கவும் மற்றும் இந்தியாவின் இராணுவ வலிமையை உலகிற்கு அடையாளப்படுத்துவதன் நோக்கமாகக் கொண்டது.
குறிப்பாக ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற பதற்றமான எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள நமது வீரர்களுக்கு தெய்வீகப் பாதுகாப்பும், வலிமையும் அவசியம் என்று பவன் கல்யாண் வலியுறுத்தினார்.
மேலும் நம் பாரத “தேசத்தின் நலன் முதலில் அரசியல், மற்ற அனைத்தும் பின்பற்றப்படும்” என்ற நம்பிக்கையை அவர் எப்போதும் பேணி வருகிறார். தேசிய வாதத்தின் இந்த உணர்வு இந்த முயற்சிக்கு வழிகாட்டியது.
சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில், அப்பாவி சுற்றுலாப் பயணிகள் தங்கள் மதத்தின் அடிப்படையில் கொல்லப்பட்டது, பாகிஸ்தானால் ஊக்குவிக்கப்பட்ட பயங்கரவாதத்தின் கொடூரமான செயலாகும். இந்தியா வலிமையுடனும் தெளிவுடனும் பதிலளித்தது.
பாகிஸ்தான் போர்நிறுத்தம் பற்றி பேசினாலும், அதன் நடவடிக்கைகள் வஞ்சகத்தை காட்டிக் கொடுத்தன- நமது படைகள் உறுதியான மற்றும் பொருத்தமான பதிலை அளித்தன.
பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல், ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது, நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் நமது ஆயுதப்படைகள் மற்றும் தேசிய தலைமைக்கு ஆதரவாக ஒன்றுபட வேண்டும் என்று கூறினார்.
போரை நிறுத்துவதற்கு டிரம்ப், மோடிக்கு அழுத்தம் கொடுத்தாரா என்ற கேள்விக்கு:
இது போர் இல்லை, அது ஒரு தீவிரவாதச் செயல். தீவிரவாத செயல் என்பது வன்முறைச் செயலாகும். இந்த நடவடிக்கையில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுவோம்.
தீவிரவாத முகத்துடன் யார் வந்தாலும் அவர்களை எதிர்கொள்ள இந்தியாவிற்கு தெரியும். நரேந்திர மோடியின் வலுவான தலைமையின் கீழ் இந்தியாவில் ஒவ்வொரு மனிதனும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும். என்று கூறினார்.