ராமநாதபுரம், ஏப்.22-
பெண்களை தொடர்ந்து இழிவுடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசிய திமுக அரசின் அமைச்சர் பொன்முடியைக் கண்டித்தும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய கோரியும் இராமநாதபுரம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் இராமநாதபுரம் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி தலைமை வகித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார். மாவட்டச் செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, மகளிர் அணி செயலாளர் கவிதா சசிகுமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன், அவைத் தலைவர் சாமிநாதன், முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன், ஆர்.ஜி.ரத்தினம், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முனியசாமி, ஆனி முத்து, சுந்தர பாண்டியன், நகரச் செயலாளர் பால்பாண்டி, நாட்டுக்கோட்டை ஜெய கார்த்திகேயன், மாணவரணி செயலாளர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்பம் பிரிவு விருதுநகர் மண்டல செயலாளர் சரவணகுமார் மாவட்ட செயலாளர் நாகராஜன், ராஜா, மாவட்ட பொருளாளர் குமரவேல் உட்பட பலர் கலந்து கொண்டு கோசங்கள் எழுப்பினர். மாவட்டம் முழுவதும் இருந்து பெண்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை கோஷங்களாக எழுப்பினர்.