மதுரை மே 18,
மதுரை திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி. மதுரை திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி தெற்கு ரயில்வே கோட்டம் அறிவிப்பு. கோடை கால பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்க சில ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. அதன்படி மே 17 முதல் மே 22 வரை சென்னை எழும்பூர் – குருவாயூர் ரயிலிலும் (16127), மே 17 முதல் மே 23 வரை குருவாயூர் – சென்னை எழும்பூர் ரயிலிலும் (16128), மே 16 முதல் மே 20 வரை திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா ரயிலிலும் (16343), மே 17 முதல் மே 21 வரை மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா ரயிலிலும் (16344) கூடுதலாக தலா ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும். சென்னை எலும்பூர்- குருவாயூர் ரயில் நேற்று 17 முதல் வரும் 23 ஆம் தேதி வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படும். அதே போல் திருவனந்தபுரம்- மதுரை ரயிலில் இன்று 16-முதல் வரும் 21ஆம் தேதி வரை கடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பேட்டி இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
மதுரை திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics