திருப்பூர் டிச. 28 சொத்து வரி உயர்வு தொழில்வரி உயர்வு குடிநீர் வரி மின் கட்டண உயர்வு குப்பை வரி என பல்வேறு வரி விதிப்பிற்கு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் இப்ராஹிம் பாதுஷா கண்டன உரையாற்றினார். மாநகர் மாவட்ட செயலாளர் அபுதாஹிர் தலைமை தாங்கினார் தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தேமுதிக எஸ்டிபிஐ இந்திய தேசிய லீக் கட்சி முக்குலத்தோர் தேசிய கழகம் அனைத்து வியாபாரிகள் சங்கம் பசும்பொன் பக்தர்கள் பேரவை உள்ளிட்ட கட்சி மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஜனநாயகம் முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளர் பிரகாஷ், தலைமை நிலைய செயலாளர் பாரூக், அமைப்பு செயலாளர் விஷ்ணு லட்சுமணன் ஆலோசகர் சவிதா ராணி அமைப்பாளர் மோகன்ராஜ் துணை அமைப்பாளர் ஹசீனா பேகம் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய பகுதி கழகப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



