நாகர்கோவில் ஜூன் 18
கன்னியாகுமரி அருகே ஆமணக்கன்விளை கடற்கரையில் நேற்று (ஜூன் 17) காலை அம்மன் சிலை ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் லீபுரம் கிராம நிர்வாக அதிகாரி சாத்தா அப்பகுதிக்கு சென்று சிலையை மீட்டு குமரி அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். இந்த சிலை சிங்கத்தின் மீது அம்மன் அமர்ந்திருக்கும் படியும், இரண்டரை அடி உயரம் கொண்டதாக இருந்தது. கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட சிலை தற்போது அருங்காட்சியகத்தில் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.



