திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளானூர் முதல் நிலை ஊராட்சியில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆரிக்கம்பேடு இலட்சுமி நகர் அருகில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
வெள்ளானூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் அ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல் இணைய வழி வரி செலுத்தும் சேவைகள் இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி அனுமதி வழங்குதல் தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு (டிஎன் பிஏஎஸ்எஸ்) குறித்து விவாதித்தல் தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம் உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு குறித்து விவாதித்தல் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) தூய்மையான குடிநீர், ஜல் ஜீவன் இயக்கம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் 2012 உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கிராம சபை கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் எம்.சதீஷ்குமார் ஒன்றிய கவுன்சிலர் ஜி.தயாநிதி ஊராட்சி மன்ற செயலர் ஜெ.நாகராஜன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.