மண்டபம் மேற்கு ஒன்றியம் இரட்டை ஊரணி ஊராட்சி இரட்டையூரணி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் திமுக மாவட்ட கழகச் செயலாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பங்கேற்றார். ஏற்பாட்டினை மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன் செய்திருந்தார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



