தஞ்சாவூர். ஜன.22.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 440 மனுக்களை அளித்தனர். மனுக் களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அதன் மீது உடனடியாக நடவடிக்கை மேற் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குஉத்தரவிட்டார்.
மேலும் மக்கள்குறைதீர்க்கும் கூட்டத்தில் பட்டுக்கோட்டை சேர்ந்த அய்யாவு என்பவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வேண்டி மனு அளித்ததன் அடிப்படையில் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் சங்கர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்