கருங்கல், ஜுலை 8 –
கருங்கல் அருகே பாலவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்னுமணி (82) விவசாயி. சம்பவ தினம் வயலுக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டிலிருந்து சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் பின்னர் வீட்டிற்கு அவர் திரும்பவில்லை. உடனடியாக உறவினர்கள் வயல்வெளியிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் தேடினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஆலங்குளத்தில் பொன்னுமணி சடலமாக மிதப்பதை பார்த்தனர்.
இதை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு துறையினர் குளத்தில் இறங்கி உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். கருங்கல் போலீசார் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்மணி எப்படி இறந்தார்? என்பது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


