தென்காசி மாவட்டம்
தென்காசிநாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் போட்டியிட்டார் வருகிற நாலாம் தேதி அன்று தென்காசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைத்து தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார் வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பங்கேற்று முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது வாக்கு எண்ணிக்கை நடைபெறக் கூடிய 4ம் தேதிக்கு முதல் நாள் 3ம் தேதி இரவு 7 மணி அளவில் மாவட்ட செயலாளர் கூறும் இடத்திற்கு அனைத்து முகவர்களும் வரவேண்டும் அங்கு இரவு உணவு மற்றும் காலையில் குளித்து புறப்படுவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்து 6 மணி அளவில் புறப்பட்டு 6.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்று 7 மணிக்கு அனைவரும் அவர்களுக்கான வாக்கு என்னும் இடத்தில் அமர்ந்து இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட 3 கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் இடத்தில் முன் வரிசையில் அமர முடியும் ஆகவே குறித்த நேரத்திற்கு வந்து அனைவரும் அமர வேண்டும். மற்ற இரு கட்சிகளுடைய முகவர்கள் உரசுவார்கள் நாம் அனைவரும் அமைதி காத்து பொறுமையுடன் இருக்க வேண்டும் இல்லையென்றால் வாக்கு எண்ணிக்கை இரவு 12 மணி அதிகாலை வரை கூட காத்திருக்கக்கூடிய நிலை ஏற்படும் எனவே அமைதியாக இருந்து வாக்கு எண்ணிக்கையில் நாம் வெற்றி பெற்று முதல்வரிடம் வெற்றியோடு சமர்ப்பிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தை பார்க்க கூடாது அந்தந்த சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குகள் எப்படி நமக்கு வருகிறது என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் கடந்த தேர்தலில் இங்கு வெற்றி பெற்ற வேட்பாளர் 327 வாக்குகளில் தான் வெற்றி பெற்றார். இதேபோன்று விருதுநகர் தொகுதியில் மாணிக் தாவூர் வைகோ -வை விட 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். ஆகவே அனைவரும் உன்னிப்பாக கவனித்து வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் வெற்றி ஒன்றே நமது குறிக்கோளாக இருந்து செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முகவர்கள் பங்கேற்றனர்.