சிவகங்கை, ஆகஸ்ட் 23 –
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்குட்பட்ட தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட சுகாதார அலுவலர் (பொ) மரு. சுபாஷ் காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



