தஞ்சாவூர், ஏப்ரல் 25 –
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தியாக பிரம்ம ஜீவ சமாதியில் சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் 259 வது ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் சத்குரு தியாகராஜ சுவாமிக்கு காலை முதல் அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை பரம்பரை பூஜா ஸ்தானிகர் தியாகராஜ சர்மா செய்தார். ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்று தியாக பிரும்மத்தின் பஞ்சரத்தின கீர்த்தனைகள், சம்பிரதாய கீர்த்தனைகளை இரவு வரை பாடி இசையஞ்சலி செலுத்தினர். பின்னர் அன்னதானமும் ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெற்றது.


