தஞ்சாவூர் மே 18.
தஞ்சாவூரில் கல்வி காவலர் பூண்டி கி.துளசி ஐயா வாண்டையாரின் 4வது நினைவேந்தல் மற்றும் கல்வியாளர்களின் பார்வையில் கல்வி காவலர் என்கின்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது
நிகழ்ச்சியில் முனைவர் உரு. ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கு.வே. பாலசுப்பிரமணி யன் தலைமை வகித்தார். துளசி ஐயா வாண்டையார் உருவப்படத்தி ற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது .கல்வியாளர்கள் பார்வையில் கல்வி காவலர் என்ற நூலை பெரிய கோவில் சதய விழா குழு தலைவர் து.செல்வம் வெளியிட , அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பா பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு துளசி அய்யா வாண்டையார் நினைவாக கல்வி உதவித் தொகையை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராமச்சந்திரன் வழங்கினார்
தொடர்ந்து மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிஜி ராஜேந்திரன், ஆடிட்டர் ஆர். ரவிச்சந்திரன், மதிமுக மாவட்ட செயலர் வி.தமிழ்ச்செல்வன், ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றினர்
நிறைவாக முனைவர் வி. பாரி நன்றி கூறினார்.நிகழ்ச்சி தொகுப்புரையை ந.மு. வெங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி தாளாளர் வி விடுதலை வேந்தன் வழங்கினார்



