திருவெண்ணெய்நல்லூர், ஆக. 18 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகரில் நகர விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் 63-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ரத்ததானம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நகர செயலாளர் வழக்கறிஞர் மனோகரன் சிறப்பான ஏற்பாடுகளை செய்து தலைமை தாங்கினார். முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.
இந்த முகாமை இருவேல்பட்டு மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவ குழுவினர் பங்கேற்று நடத்தினர். மேலும் முகாமில் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட பொது மருத்துவம் குறித்து பொதுமக்களுக்கு உடற் பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்பட்டது. இதில் பாக்யராஜ், சேவல் மணி, மகி, பிரபுதேவா, சுபாஷ், வருண், குமரவேல், தீனா, குமரேசன், மணி, ராமு, ராஜ், யுவராஜ் உள்ளிட்ட விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



