சேலம், ஆகஸ்ட் 14 –
சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சியில் ஊத்துக்குளிக்காடு பகுதியில் அஇஅதிமுக கட்சித் தொண்டரின் மகள் சித்ரா ஷாலினி என்ற ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை 23000 ரூபாய் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து மற்றும் சேலம் புறநகர் அம்மா பேரவை மாவட்டத் துணைத் தலைவர் சி.பி. சித்திராஜ் இணைந்து அக்கல்லூரி மாணவிக்கு கல்வி நிதி உதவி வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். உடன் கிருஷ்ணன் வீரபாண்டி அம்மா பேரவை துணைச் செயலாளர் மற்றும் ஊத்துக்குளிக்காடு கிளைச் செயலாளர் வைத்தி மேலும் கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.



