தக்கலை, ஆக. 4 –
தக்கலை அடுத்த பள்ளியாடியை சேர்ந்தவர் சிஜி (34). முதுநிலை பொறியியல் பட்டதாரியான இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் ஐடி நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சிஜி மோட்டார் சைக்கிளில் தக்கலை சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு வரும்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் கீழே சாய்ந்து அங்குள்ள ஓடை பள்ளத்தில் விழுந்துள்ளார்.
இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் தக்கலை போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.