தருமபுரி, ஜூலை 10 –
தருமபுரி மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இலக்கியம்பட்டி ஊராட்சி, V.ஜெட்டிஅள்ளியில் உள்ள வாக்குசாவடி எண்- 99 க்கு உட்பட்ட பகுதியில் தருமபுரி மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் D.L. காவேரி வீடு வீடாக சென்று உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டார். தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் ஆ. மணி எம்பி, V.ஜெட்டிஅள்ளி பகுதிக்கு நேரில் சென்று உறுப்பினர்கள் சேர்க்கையை பார்வையிட்டார். மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் கெளதம், துணை ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன், ஒன்றிய துணை செயலாளர் SKM. சதீஷ்குமார், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் LRV. சதீஷ்குமார், முன்னாள் மாணவர் அணி S. அண்ணாதுரை, மாவட்ட சிறுபான்மையினர் அணி முகமது, DLK. கார்த்தி மற்றும் கிளை கழக, BLA2, BDA உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.