நாகர்கோவில், ஜூன் 23 –
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள அறிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டம் – கடலோர அமைதி மற்றும் மேம்பாட்டு குழுமத்தின் (Costal Peace & Development – CPD) அலுவலகத்தில் அதன் இயக்குனரான Rev. Fr. டன்ஸ்டன்-னை மரியாதை நிமித்தமாக சந்தித்து போர்ச் சூழலில் இருக்கும் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்காக சென்று சிக்கியிருக்கும் ஏராளமான கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் குடும்பங்கள் பயத்துடனும் பதட்டத்துடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை உள்ளது. அவர்களை மீட்பதற்கும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் இந்த அமைப்பு சார்பில் அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு அதற்கு நாம் தமிழர் கட்சி எல்லா வகையிலும் ஆதரவும் பக்கபலமும் தரும் என்ற உறுதியையும் அளித்திருக்கிறோம். மேலும் சமகாலத்தில் கடற்கரையையும் அதன் மக்களையும் குறிவைத்து வரும் நாசகார திட்டங்களைப் பற்றியும் அவற்றை எதிர்கொள்வதற்கான அரசியல் முன்னெடுப்புகள் பற்றியும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.