கன்னியாகுமரி, மார்ச் 23 –
கன்னியாகுமரி அடுத்த அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் மனைவி விஜயமயில் (39). இவர் வக்கீலாக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுதன் (38) என்பவருக்கும் இடையே நடைபாதை பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் உள்ளது.
சம்பவ தினம் விஜய மயில் தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு சென்ற சுதன், அவரது அண்ணன் செந்தில் ராசு (47), தாய் ஸ்ரீமதி (65) ஆகியோர் முன்விரோதத்தை மனதில் வைத்து தகராறு செய்து விஜய் மயிலை தாக்கி உள்ளனர்.
இதில் வக்கில் காதில் இருந்த கம்மல் அறுந்து கீழே விழுந்துள்ளது. மேலும் அவரது தலை முடியை பிடித்து இழுத்து, கல்லால் தாக்கி, சவுக்கு கம்லை கம்பை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதல் படுகாயம் அடைந்த விஜய மயில் நடவடிக்கை எடுக்க கோரி நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தென்தாமரை குளம் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன் பேரில் போலீசார் பெண் வக்கீலை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன்கள் என 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


