கன்னியாகுமரி மாவட்டம் இணையம் புத்தன் துறையில் மின்சார விபத்து ஏற்பட்டு நான்கு மீனவர்கள் பலியானார்கள். இறந்த மீனவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் கொல்லங்கோடு பகுதியில் மெழுகுதிரி ஏத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் தோழர் பிராங்கிளின் தலைமை வகித்தார். உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்.விஜய மோகன், தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் S.அந்தோணி, கொல்லங்கோடு பகுதி குழு செயலாளர் அஜித், மாவட்ட நிர்வாகிகள் டிக்கர்துஸ், பிரவீன், மேரிதாசன், கிளமெண்ட், எஸ்கலின், அந்தோணியார் பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.



