கிருஷ்ணகிரி, ஜூன் 23 –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மற்றும் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு “பொது துறை அமைப்புகளில் ஆற்றல் திறன்”, “சூரிய ஒளி மின்சார அமைப்பு” மற்றும் “புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் ஒருங்கிணைப்பு” என்ற தலைப்புகளுக்கான பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.கவிதா, சென்னை CPM and HOD REC Regional Office, தாரா ரமேஷ், கிருஷ்ணகிரி வட்ட மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் (பொறு) செ.கவிதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.