கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக டெங்கு காய்ச்சல் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:
டெங்கு நோய் ஏடிஸ் கொசுவினால் பரவுகிறது. ஏடிஸ் கொசு முக்கியமாக சுத்தமான தண்ணீர் தேங்கும் பகுதிகளில் உற்பத்தியாகிறது.. மழைக்கு பிறகு பிளாஸ்டிக் கப்புகள், காகித கோப்பைகள், பிஸ்கெட் கவர்கள், தார்பாய் தாள்கள், உடைந்த பானைகள் மற்றும் கொள்கலன்கள், தேங்காய் ஒடுகள், டயர்கள், உடைந்த பொம்மைகள், மேற்கூரைகள் போன்றவற்றில் தற்காலிகமாக மழை நீர் தேங்கும் இப்பகுதிகள் ஏடிஸ் கொசுகளின் இனப்பெருக்க புள்ளியாக செயல்படுகிறது. இந்த சேமிக்கப்படும் தண்ணீரில் கொசு முட்டையிட்டு லார்வாவாக வளர்ந்து பின்னர் கொசுவாக உற்பத்தியாகிறது. வளர்ந்த கொசுவானது 500 மீட்டர் தூரம் பறக்கும் திறன் கொண்டது. எனவே, 400 மீட்டர் தொலைவில் சென்று கொசு உற்பத்தி செய்து கொசு வளர்ந்து நோய் பரப்புகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பொது சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதார ஆய்வாளர்கள் லார்வா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் லார்வாக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றனர். பொதுமக்களும் தங்கள் வீட்டைச் சுற்றி லார்வா வளருவதற்கான இனப்பெருக்க புள்ளிகள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மாவட்ட சுகாதார அலுவலர் அவர்கள் தலைமையில் மாவட்டத்திலுள்ள அனைத்து
காய்ச்சல் நோயாளிகளையும் கண்காணித்து தரவுகளுடன் அதிக பாதிப்புகள் உள்ள
பகுதிகளில் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பு உள்ள இடங்களின் அடிப்படையில் நடமாடும்
மருத்துவக்குழுவினர் மற்றும் விரைவு நடவடிக்கை குழுக்கள் மூலம் ஒவ்வொரு
பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. கிருஷ்ணகிரி நகராட்சியிலும், ஒசூர்
மநகராட்சியிலும் இதே நடைமுறை தான் கடைப்பிடிக்கப்படுகிறது.மேலும், டெங்கு பாதித்தால் காய்ச்சல், கண் பின்புறம் வலி, உடல் வலி ஆகிய அறிகுறிகள் தெரியும். இந்நோய்க்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இரத்தப் பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகள் உள்ளன. பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்படும் போது காய்ச்சல் முகாம்களில் கலந்துக்கொண்டு சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அல்லது டெங்கு அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது பதிவு செய்யப்பட்ட மருத்துவரை அனுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், டெங்கு பாதிப்பை உரிய நேரத்தில் கண்டறிய தவறினால் கடுமையான சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
கொசு ஒழிப்பு பணிகளுக்காக அனைத்து நகர/கிராம பகுதிகளில் களப்பணிகளை மேற்கொள்ள சுமார் 546 தற்காலிக மஸ்தூர்கள் இம்மாவட்டத்தில் பணியமர்த்தி கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இம்மாவட்டத்தில் சுமார் 837 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 30,808 பொதுமக்கள் சிகிச்சை பெற்று பலன் அடைந்துள்ளனர்.
டெங்கு ஒழிக்க சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக 1,748 விளம்பர அறிக்கை தாள்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேற்காணும் வழிகாட்டு நடைமுறைகளை அனைத்து பொது மக்களும் / அரசு /தனியார் துறை நிறுவனங்களும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழிற்சாலைகளில் களவு ஆய்வு பணிகள் மற்றும் ஒவ்வொரு சனிக்கிழமை மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு .,அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கோ.ரமேஷ்குமார், மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.



