சென்னை, செப். 23 –
சென்னை ஆவடியில் தங்கமயில் அதன் 65-வது கிளையையும், கீழ்கட்டளையில் 66-வது கிளையையும் கோலாகலமாக திறப்பு விழா கண்டது. இந்த விழாவில் நிறுவனத்தின் தலைவர் பலராம கோவிந்த தாஸ் மற்றும் நிர்வாக இயக்குனர், பா. ரமேஷ் இணை நிர்வாக இயக்குனர், என்.பி. குமார் இணை நிர்வாக இயக்குனர் ஆகியோர் திறப்பு விழாவுக்கு பங்கேற்ற அனைவரையும் உடன் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் பலராம கோவிந்த தாஸ் செய்தியாளரிடம் பேசியபோது: தங்கமயில் ஜுவல்லரி நிறுவனமானது மதுரையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 33 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனியொரு அடையாளத்தை பதித்துள்ளது. இதன் மூலம் தற்போது 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களுடன் தமிழகம் முழுவதும் 64 கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்த விழாவை முன்னிட்டு முக்கிய அம்சமாக தங்கமயில் ஜுவல்லரி காட்சியகத்துக்குள்ளேயே தனது பிரத்யேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி அதில் ‘தங்க மாங்கல்யம்’ என்னும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.



