சிவகங்கை: ஏப்:23
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் பூவந்தி காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட செம்பூர் அருகே மதுரையில் இருந்து தாயமங்கலம் இண்டன் கேஸ் குடவுனுக்கு கேஸ் ஏற்றிச் சென்ற லாரியும் சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதாமல் இருக்க பக்கவாட்டில் வண்டியை திருப்பிதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னால் வந்த இன்னொரு மினி லாரியும் அந்த பேருந்து பின்புறம் இடித்து நின்றது இதனால் பத்துக்கும் மேற்பட்டோர் சிறு சிறு காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தும் கேஸ் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்று அந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.