இரணியல், டிச. 1 –
பேச்சிப்பாறை அணை தண்ணீர் இரணியல் கிளை கால்வாய் வழியாக மேக்காமண்டபம் திருவிதாங்கோடு வழியாக வரும் வழியில் ஆங்காங்கு வீசப்படுகின்ற பழைய கழிவுகளான மெத்தை, பழைய டிவி, ரேடியோ, வாழை மரங்கள், தெர்மோகோல் மற்றும் இறந்த நாய்கள், கோழிகள், மாட்டுக் குடல்கள் ஆங்காங்கே சேனல் நீரில் வீசப்படுவதால் மிகுந்த துர்நாற்றம் வீசப்படுவதோடு இரணியல் திங்கள்நகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாலத்தடுப்புகளில் தேங்கி நின்று பெரும் சுகாதார கேடு ஏற்படுவதோடு பல பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
ஆகவே மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை ஒருங்கிணைந்து இதனை தவிர்க்க ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து அந்தந்த பகுதி பேரூராட்சி நிர்வாகங்கள் மூலமாக கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,


