By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி 4 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

Last updated: June 10, 2026 5:45 pm
June 10, 2026
3 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 10 –

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை நான்குவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: கேரளா – தமிழ்நாடு எல்லையான களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரையிலான என்.எச் 47 நான்கு வழிச்சாலையில் கூடுதல் கட்டுமான பணிகள் ரூ.1041.3 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெட்டி வடிவக்குழாய் பாலப்பணி 15, பெட்டி வடிவக்குழாய் பாலங்கள் அகலப்படுத்தும் பணி 15, சிறிய பாலங்கள் 14, பெரிய பாலங்கள் 25, வாகனங்கள் செல்வதற்கான சுரங்கப்பாதை பணிகள் 9, வாகனங்களுக்கான மேம்பாலங்கள் 12, பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள் 2, ரயில்வே மேம்பாலம் 2, வடிகால் பணிகள், 1 சுங்கசாவடி, பேருந்து நிறுத்தங்கள், நிழற்கூடைகள், சரக்கு வாகனங்கள் நிறுத்துமிடம், சேவைச்சாலைகளை அகப்படுத்துதல் என பல்வேறு பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இதில் 2 பெட்டி வடிவக்குழாய் பாலங்கள் அகலப்படுத்தும் பணியும், 2 சிறிய பாலங்கள் பணியும், 2 சுரங்கப்பாதை பணியும், 7 பெரிய பாலங்கள் பணியும், ஒரு ரயில்வே மேம்பால பணியும் நடைபெற்று வருகிறது. இந்த பணியால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக வழுக்கம்பாறை, ஒழுகினசேரி, புத்தேரிகுளம், சுங்கான்கடை, தோட்டியோடு, வாழ்வச்சக்கோஷ்டம், பள்ளியாடி, காப்புக்காடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறையினர் இப்பணிகளை மேலும் தாமதிக்கமால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எந்தவிதமான காரணமும் கூறமால், தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது என கலெக்டர் கூறினார்.

நடைபெற்ற ஆய்வுகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் சச்சின் குமார், திட்ட பொறியாளர் சிவா, மாவட்ட நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கிறிஸ்மஸ் புத்தாண்டு தொடர் விடுமுறை; திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
குழித்துறையில் தொடர்ந்து நான்கு நாட்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
புனித சவேரியார் பேராலய பரதர் தெற்கு பொதுக்குழு
காண்டாமிருக வண்டு மேலாண்மைக்கு பக்கெட் டிராப்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி பிரச்சாரம்

April 15, 2026
58 Views
தென்னிந்திய அளவிலான ஆக்கிப்போட்டி தொடக்கம்
தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை
பொய்கை மோட்டூர் மகா கும்பாபிஷேக விழா
இனிப்பு கார வகைகள் தயாரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account