நாகர்கோவில் ஏப் 14
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-வாக தேர்வான விஜயதாரணி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.கவில் இணைந்தார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பா.ஜனதாவில் தன்னை இணைத்து கொண்டதால், அவரின் சட்டசபை உறுப்பினர் பதவி பறிபோனது.
விஜயதாரணி சமீபத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷாவை டெல்லிக்கு சென்று, விஜயதாரணி நேரில் சந்தித்த போது கட்சி பொறுப்பு தொடர்பாக அவர் அமித்ஷாவிடம் வலியுறுத்தியாக பேசப்பட்டது. ஆயினும் தற்போது வரையில் பா.ஜனதாவில் விஜயதாரணிக்கு பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. சென்னையில் நடைபெற்ற அமித்ஷா நிகழ்ச்சியில், விஜயதாரணியும் கலந்து கொண்டார்.
அப்போது தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர்கள் நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டன. ஆனால் அதிலும், விஜயதாரணியின் பெயர் இடம் பெறவில்லை என்பதால், அவர் ஏமாற்றம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.