அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தடையை தாண்டுவோம் தலைப்பில் கருத்தரங்கு தென்தாமரைகுளம்., ஏப். 9.அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறை சார்பில் தடையை தாண்டுவோம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் டி.எஸ். ஜெயந்தி தலைமை தாங்கினார்.கல்லூரி வணிகவியல் துறை தலைவர் டாக்டர் ஆர். தர்ம ரஜினி வரவேற்று பேசினார். அண்ணா மேலாண்மை பயிற்சி மையம் பேராசிரியர் ஆர். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கி மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.முடிவில் ஸ்ரீ பிந்து நன்றி கூறினார். நிகழ்ச்சியில் வணிகவியல் துறை பேராசிரியர்கள் ராஜ பிரியா, முருக பூபதி, ஜெயபிரபா, ஜானகி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



