களியக்காவிளை, மார். 17 –
குமரி மாவட்ட தென்னை விவசாய சங்கம் சார்பில் களியக்காவிளை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நாற்காலிகள் வழங்கப்பட்டன.
களியக்காவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு, அண்மையில் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இங்கு புறநோயாளிகள் அமர வசதியில்லாத நிலை இருந்து வந்தது. இதையடுத்து குமரி மாவட்ட தென்னை விவசாய சங்கம் சார்பில் சுகாதார நிலைய மருத்துவ அலுவர் தனசிங்கிடம், நாற்காலிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட தென்னை விவசாய சங்க மாவட்ட செயலாளர் வின்சென்ட், மேல்புறம் வட்டாரக் குழு உறுப்பினர்கள் ஆல்பர்ட் ராஜ், சதீஷ் சந்திர பிரசாத் மற்றும் தர்மராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



