பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக பொது சுகாதாரத் துறை இயக்குனரின் அறிவுறுத்தலின் பேரிலும் திண்டுக்கல் சுகாதார மாவட்டம், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் R. செல்வகுமார் அவர்களின் அறிவுரையின் பேரிலும் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கோடைகால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.அ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு கோடைகாலத்தில் வெப்ப பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மக்கள் பெரும்பான்மையாக கூடும் இடங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் மருத்துவர்கள் சந்திரிகா, சசிகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ரவிசங்கர், சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசு, மாரிவேல், பார்த்திபன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.



