கிருஷ்ணகிரி, செப். 13 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிரிடிட் ஆக்சஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி மண்டல மேலாளர் பசுவராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் டிஜிட்டல் பண மோசடிகளை எப்படி தடுப்பது, குழு மற்றும் தனி நபர் கடன் ஒழுங்குபடுத்தும் பழக்கம், பொறுப்புடன் கடன் எடுப்பது, கடனை பெற்றவர்கள் வீட்டு தேவைக்கு பயன்படுத்துங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்தினர்.
மேலும் நிகழ்ச்சியில் CSR – துறை – அருண், பகுதி மேலாளர் அருள்மணி, ரவிக்குமார்
துணை வட்டாச்சியர் – பிரியதர்ஷினி, குற்றப் புலனாய்வுத் துறை – அதியமான்,
கிளை மேலாளர் – ராஜேஷ், எழில்குமார், ஊத்தங்கரை சமூக பொருளாதார வளர்ச்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.



