தஞ்சாவூர்.மார்ச்.31.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான சம்பா பருவத்தில் 3 லட்சத்து 22,ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, இது வரை 3 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கரில் அறுவடை பணிகள் நிறைவடைந்து உள்ளன. நடப்பு கோடை பருவத்தில் நெல் 13 ஆயிரத்து 200 ஏக்கரும், உளுந்து 36 ஆயிரத்து 279 ஏக்கரிலும் மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் 26 ஆயிரத்து 797 ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம் மற்றும் பேராவூரணி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன 6 உழவர் சந்தையிலும் ரூபாய்81 கோடியே 69 லட்சம் மதிப்பில் 18,732 டன் காய்கறி வரத்து வந்துள்ளது இதுவரை சராசரியாக167 விவசாயி களும் .6ஆயிரத்து 380 நுகர்வோ ரும் பயனடைந்துள்ளனர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் கூட்டு பண்ணைய திட்டம் மற்றும் தமிழ்நாடு நீர் பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டங்களில் மூலம் 17 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ரூபாய் 4 கோடி 79 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல் படுகிறது .இதன் மூலம் 14 ஆயிரத்து 463 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
நடப்பாண்டில் 597 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கடந்த 24 ஆம் தேதி வரை 4, இலட்சத்து68 ஆயிரத்து 86 டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளது .இதுவரை1 லட்சத்து 8 ஆயிரத்து 819 விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் பயன் அடைந்துள்ளனர் .
இவ்வாறு அவர் கூறினார்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலக தியாகராஜன் வேளாண்மை இணை இயக்குனர் வித்யா ,முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், கும்பகோணம் உதவிய ஆட்சி தலைவர் ஹிருத்யா எஸ் விஜயன், நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயசீலன் மற்றும் அலுவலர்கள் ,
ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்



